fbpx
Others

கரூர்- தவெக மாவட்ட செயலாளர்மதியழகன்கைது..

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்… கரூர் மாவட்ட செயலாளர் கைது

தமிழக வெற்றிக் கழகத்தின்சார்பாக கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் நடந்த பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்சிக்கி41பேர்உயிரிழந்தனர்.பலர்படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல்துறை சார்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தமிழக  அரசு சார்பாகஓய்வுபெற்றநீதிபதிஅருணாஜெகதீசன்சார்பாகவிசாரணைக்குழுஅமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2 நாட்களாக பரப்புரை நடைபெற்ற இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கரூர் மாவட்ட செயலாளர்மதியழகன்கைதுசெய்யயப்பட்டுள்ளதாகதகவல்வெளியாகியுள்ளது.கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் தவெக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த மதியழகனைதனிப்படைகாவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இந்த நிலையில் மதியழகனுடன் தவெக நிர்வாகிகள் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவுசெய்யப்பட்டுள்ளதாகதகவல்வெளியாகியுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட விவகாரத்தில அசம்பாவிதம் நிகழும் என எச்சரித்த பிறகும் அதை கண்டுகொள்ளாமல் இருந்ததாக ஆனந்த் மீது கலவரத்தில் ஈடுபடுதல், பொது, தனியார் சொத்துக்களுக்கு சேதம்விளைவித்தல்ஆகியபிரிவுகளின்கீழ்வழக்குபதிவுசெய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் எந்த நேரம் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது.தற்போதுஅவர்தலைமறைவாகஉள்ளதாகதகவல்கள்வெளியாகிவருகின்றன  மேலும் கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் மற்றும் அவதூறு பரப்பியதாக தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சரத்குமார், சிவனேசன், பாஜகவைச் சேர்ந்த சகாயம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக வதந்திகள் பரப்பியதாக 25 சமூக வலைதள கணக்குகள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாககரூர்வந்தடைந்தமத்தியநிதியமைச்சர்நிர்மலாசீதாராமன், தவெகபரப்புரைநடந்தஇடத்தைபார்வையிட்டார்.மேலும்உயிரிழந்தவர்களின்குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

 

Related Articles

Back to top button
Close
Close