fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

ரம்ஜான் வாழ்த்துளை பகிர்ந்த ஜனாதிபதி கோவிந்த், பிரதமர் மோடி…!

PM Modi ramadan wishes

டெல்லி:

நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ரம்ஜான் சிறப்பு தொழுகைகளை வீட்டிலேயே நடத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தமது வாழ்த்தில் கூறி இருப்பதாவது: அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துகள். இந்த புனித பண்டிகையானது அன்பு, அமைதி மற்றும் சகோதரத்துவத்தை உணர்த்துகிறது. இந்த நாளில் மக்கள் பூரண நலத்துடன் இருக்க வேண்டுகிறேன் என கூறியுள்ளார். தொடர்ந்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close