ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு
முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு…! சென்னை காவல்துறையை அலற வைத்த தொலைபேசி!
Bomb threaten to CM House
சென்னை:
சென்னையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், சென்னையில் உள்ள முதலமைச்சர் வீடு, தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.
இதனையடுத்து முதலமைச்சர் வீட்டில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். ஆனால் எதுவும் சிக்கவில்லை.
அதை தொடர்ந்து மிரட்டில் குறித்து புலன் விசாரணை நடத்தினர். அப்போது அது புரளி என தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.