மன்சூர் அலிகான் –ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டி–அறிவிப்பு..
மக்களவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிடப்போவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மயிலம் மக்கள் மனம், மகிழம்பூவாய் மகிழ, செஞ்சி கோட்டையின் செம்மாந்தர்கள் கொடி பறக்க, செய்யாறு மக்களின் சோற்றில் நெய்யாறு ஓட, நான் சுசுவாசி அல்ல, பந்தா வாசி அல்ல, மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வந்த-வாசி. அரசியல் பொதுநல, சந்நியாசி. போளூர் மக்களின் புகழூர் தாய்மார்கள் வயிற்றில் பால் வார்த்திடும், பாலூர், ஆரணியே, அன்ன பட்சினியே, நினை, என் ,மனதின் ஆழ்நிலை சக்தியாய், தாயாராய், மகளாய் துதித்து, பணிசெய்ய,ஆணையிடுவாய் தாழ்திறவாய், தரணி போற்றும்,ஆரணியே”என்றுதெரிவித்துள்ளார்.மன்சூர் அலிகான் ‘தமிழ் தேசிய புலிகள்’ என்ற தனது கட்சியின் பெயரை ‘இந்திய ஜனநாயக புலிகள்’ என அண்மையில் பெயர் மாற்றினார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.