fbpx
Others

மத்திய அரசு –இந்தியாவுக்குள் சட்டவிரோதமாகநுழையும் வெளிநாட்டவருக்கு 5 ஆண்டு சிறை..

Migration of Indian Workers to Gulf Drops by 62 Per Cent Over Five Years;  Emigration Clearance Drops by 21 Per Cent in 11 Months as of 2018 | India .com

வெளி​நாட்டை சேர்ந்​தவர்கள் சட்ட​விரோதமாக இந்தியா​வுக்​குள் நுழைந்​தால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்​கும் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வர திட்​ட​மிட்​டுள்​ளது.வங்கதேசம், மியான்​மர், நேபாளம், பாகிஸ்​தான், ஆப்பிரிக்கா உட்பட பல்வேறு நாடு​களைச் சேர்ந்​தவர்கள் இந்தியா​வுக்​குள் சட்ட​விரோதமாக நுழைந்து தங்கி விடு​கின்​றனர். அத்துடன் அவர்கள் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை உட்பட இந்தி​யர்​களுக்கான அனைத்து ஆவணங்​களை​யும் போலி ஆவணங்கள் மூலம் பெற்று வருகின்​றனர். இதனால் உள்நாட்​டில் அச்சுறுத்தல் ஏற்படு​கிறது. இதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக வெளி​நாட்​ட​வர்களை கண்டறிந்து அவர்களை திரும்ப அனுப்பி வருகிறது.இந்நிலை​யில், பாஸ்​போர்ட், விசா அல்லது செல்​லத்​தக்க ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இந்தியா​வுக்​குள் நுழைபவர்​களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை​யும் ரூ.5 லட்சம் அபராத​மும் விதிக்க மத்திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. அத்துடன் போலி ஆவணங்கள் மூலம் இந்தியா​வுக்​குள் நுழை​யும் வெளி​நாட்​ட​வர், போலி ஆவணங்கள் மூலம் இந்தியா​வில் இருந்து வெளி​யேறும் வெளி​நாட்​ட​வர்​களுக்கு 2 ஆண்டுக்கு குறையாத சிறை தண்டனை​யும் ரூ.1 லட்சம் அபராத​மும் விதிக்க முடி​வெடுக்​கப்​பட்​டது. இந்த தண்டனை 7 ஆண்டுகள் வரையும் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்​க​வும் பரிசீலனை செய்​யப்​படு​கிறது.தற்போது வெளி​நாட்​ட​வர்கள் இந்தியா​வுக்​குள் நுழைய 4 சட்டங்கள் உள்ளன. வெளி​நாட்​ட​வர்கள் சட்டம் – 1946, பாஸ்​போர்ட் (இந்தியா​வுக்​குள் நுழைவதற்கு) சட்டம் – 1920, வெளி​நாட்​ட​வர்கள் பதிவு சட்டம் 1939, குடியேற்ற சட்டம் 2000 ஆகிய 4 சட்டங்கள் அமலில் உள்ளன. இந்த சட்டங்​களுக்​குப் பதில் ஒருங்​கிணைந்த ‘குடியேற்ற மற்றும் வெளி​நாட்​டினர் சட்டம் 2025’ மசோதாவை தற்போது நடைபெற்று வரும் நாடாளு​மன்ற பட்ஜெட் கூட்​டத்​தொடரில் அறிமுகப்​படுத்த மத்திய அரசு திட்​ட​மிட்​டுள்​.ளது.தற்போதுள்ள சட்டத்​தின்படி பாஸ்​போர்ட் இல்லாமல் இந்தியா​வுக்​குள் நுழை​யும் வெளி​நாட்​டினருக்கு அதிகபட்​சமாக 5 ஆண்டு சிறை தண்டனை​யும் அபராத​மும் விதிக்க வழிவகை செய்​யப்​பட்​டுள்​ளது. அதேநேரத்​தில் போலி பாஸ்​போர்ட் மூலம் இந்தியா​வுக்​குள் நுழைப்​வர்​களுக்கு அதிகபட்ச தண்டனை 8 ஆண்டு சிறை​யும் ரூ.50,000 அபராத​மும் விதிக்க வழிவகை செய்​யப்​பட்​டுள்​ளது. மேலும், இந்தியா​வில் உள்ள உயர் கல்வி நிறு​வனங்​கள், பல்கலைக்​கழகங்​களில் வெளி​நாட்​டவர் யார் சேர்ந்​தா​லும், அவர்​களைப் பற்றிய முழு தகவல்களை மத்திய அரசுக்கு தெரியப்​படுத்த வேண்​டும் என்றுபுதிய மசோதா​வில் இடம்பெற உள்ளது. இதேபோல் மருத்​துவ​மனை​கள், நர்சிங் ஹோம், மற்ற மருத்துவ நிறு​வனங்​களில் சேரும் வெளி​நாட்​டவர் பற்றி​யும் தகவல்கள் அளிக்க இந்த புதிய மசோதா​வில் வழிவகை செய்​யப்​படு​கிறது.விசா காலம் முடிந்த பிறகு சட்ட​விரோதமாக இந்தியா​வுக்​குள் தங்கி​யிருக்​கும் வெளி​நாட்​ட​வருக்கு 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.3 லட்சம் அல்லது இரண்​டும் விதிக்​கும் வகையில் மசோதா தயாரிக்​கப்​பட்​டுள்​ளது. செல்​லத்​தக்க பாஸ்​போர்ட், பயண ஆவணங்​கள், விசா போன்றவை இல்லாமல் வெளி​நாட்​டவரை அழைத்து வரும் விமானம், கப்பல், மற்ற வாகனங்​களுக்கு குடியேற்றத் துறை அதிகாரி ரூ.5 லட்​சம் வரை அபராதம் ​வி​திப்​பார் என்று மத்​திய அரசு வட்​டாரங்​கள்​ தெரி​வித்​தன.

Related Articles

Back to top button
Close
Close