fbpx
RETamil News

அண்ணா பல்கலைக்கழக கணித வினாத்தாள் வெளியான வழக்கு – இருவர் கைது

அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டிற்கான கணித வினாத்தாள் வெளியான வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பொறியியல் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 3-ஆம் தேதி முதலாம் ஆண்டிற்கான கணித தேர்வு நடைபெற்றது. அப்போது தேர்வு எழுதுவதற்கு முன்னரே வினாத்தாள் வெளியானதாக புகார் எழுப்பப்பட்டது. இதை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

எனவே வினாத்தாள் வெளியானதாக புகார் எழுப்பப்பட்டதால் 3-ஆம் தேதி நடக்க இருந்த கணித தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும் அந்த தேர்வு 12-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.அதன் அடிப்படையில் தேர்வும் நடைபெற்று முடிந்தது.

தற்போது இந்த கணித வினாத்தாள் வெளியான வழக்கில் பொறியியல் பட்டதாரியான சுரேஷ் குமார் மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகிய இருவர் சி பி சி ஐ டி யால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.

Related Articles

Back to top button
Close
Close