இத்தனை வருடம் இல்லாமல் ஏன் பெண்களுக்கு இப்பொழுது இந்த ஆர்வம்? திடீரென வந்த பக்திதான் காரணமா? யார் உண்மையான பக்தர்கள் ?

ஏன் இப்பொழுது பெண்கள் சபரிமலை செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். இத்தனை வருடமாக இல்லாமல் இப்பொழுது ஏன் வந்தது பெண்களுக்கு ஐயப்பன் மீது பக்தி.பக்தி இருந்தது உண்மையென்றால் இத்தனை வருடமாக என்ன செய்தார்கள். ஏன் நாம் இதை யோசிக்கவில்லை.
பக்தி இருப்பது உண்மையானால் ஏன் இத்தனை வருடமாக ஐயப்பன் கோவிலுக்கு செல்லாமல் காலம் தாமதித்தது. ஏன் இத்தனை போராட்டம் ஏன் இத்தனை கலவரம் .
செக் குடியரசை சேர்ந்த 55 வெள்ளையர்கள் நெற்றியில் விபூதி , குங்குமம் பூசி பக்தி பரவசத்துடன் சதுரகிரி மலை ஏறி மகாலிங்கத்தை தரிசனம் செய்தார்கள்.
” இவ்வாறு இந்துக்களின் முறைப்படி வெள்ளையர்கள் சுவாமி தரிசனம் செய்யும் போது , இந்தியர்களே இந்து மத விரோதமாக நடந்துகொள்வதும் , பாரம்பர்ய செயலை மாற்றுவதும் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என பல வருடமாக ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.















