ChennaiGeneralRETamil Newsதமிழ்நாடு
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்…! முதலமைச்சர் அறிக்கை!
Edapaddi palanisamy statement
சென்னை:
குழந்தைகளின் வருமானம் நாட்டிற்கு அவமானம் என்பதை உணர்ந்து செயல்படுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் நாளை கடைபிடிக்கப்படுவதையொட்டி அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
குழந்தைகளின் வருமானம் நாட்டிற்கு அவமானம் என்பதை உணர்ந்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிட ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
குழந்தைத் தொழிலாளர் முறையிளை அகற்றுவதில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. குழந்தை தொழிலாளர் இல்லாத தமிழகத்தை உருவாக்க அரசின் சீரிய முயற்சி திட்டங்களுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.