fbpx
GeneralRETamil Newsதமிழ்நாடு

அக். 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்…! அமைச்சர் காமராஜ் அறிவிப்பு!

Minister kamaraj about one ration one nation

திருவாரூர்:

அக்டோபர் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்பது மத்திய அரசின் திட்டமாகும். இந்த திட்டம் முதல் கட்டமாக முன்னோட்ட அடிப்படையில் 6 மாநிலங்களில் அமலாகி உள்ளது.

சோதனை அடிப்படையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தூத்துக்குடி, நெல்லை ஆகிய 2 மாவட்டங்களில் கடந்த 1.1.2020 முதல் 29.2.2020 வரை அமல்படுத்தப்பட்டது. ஏப் 1 முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், கொரோனா வைரஸ் பரவலால் இந்த திட்டம் தள்ளி போனது. இந்நிலையில், திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில்  செய்தியாளர்களிடம் பேசிய  உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் காமராஜ், அக்டோபர் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்படும். இது தொடர்பாக மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டு விட்டது என்று கூறினார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close