வெளி மாநில தொழிலாளர்களுக்காக…! முதலமைச்சர் சொன்ன முக்கிய விஷயம்…!
Chief minister edapaddi palanisamy announcement
சென்னை:
வெளி மாநில தொழிலாளர்கள் நடந்து செல்ல வேண்டாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஊரடங்கு காரணமாக பல மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்கள் நடை பயணமாகவோ, பிற வாகனங்கள் மூலமாகவோ தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாவது: சொந்த மாநிலங்களுக்கு செல்ல விரும்பும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு பயண செலவுகளை அரசே ஏற்று தேவையான ஏற்பாடுகளை செய்து தருவதால், வெளி மாநில தொழிலாளர்கள் தன்னிச்சையாக நடை பயணமாகவோ, பிற வாகனங்கள் மூலமாகவோ செல்ல வேண்டாமெனவும் அதுவரை முகாம்களிலேயே தங்கியிருக்கவும் கேட்டுக் கொள்கிறேன்.
நாள்தோறும் 10,000 தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. வெளிமாநில தொழிலாளர்கள் தற்போது முகாம்களிலேயெ தொடர்ந்து இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.