ராமர் நேபாள நாட்டை சேர்ந்தவர்..! நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி!
Lord Ram is Nepali not Indian says Nepal Prime Minister KP Sharma Oli
காத்மாண்டு:
ராமர் நேபாளத்தைச் சேர்ந்தவர் என்றும், இந்தியா கலாச்சார அத்துமீறலில் ஈடுபட்டிருப்பதாகவும் நேபாள பிரதமர் சர்மா ஒலி தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளில் ஆர்வம் காட்டி வரும் நேபாளம், லிபுலேக் கணவாய் உள்ளிட்ட இந்திய பகுதிகளை இணைத்து வெளியிடப்பட்ட வரைபடத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்தது.
ஆட்சியை கவிழ்க்க இந்தியா முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார் . தற்போது புதிய கருத்தை வெளியிட்டு உள்ளார். தமது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நேபாளப் பிரதமர் கே.பி.சர்மா ஒலி, ராமர் வசித்த அயோத்தி என்பது இந்தியாவில் உள்ள அயோத்தி நகரம் அல்ல.
நேபாளத்தின் பிர்குஞ்ச் மாவட்டத்தில் உள்ள அயோத்தி என்ற சிறு கிராமம் ஆகும். நாங்கள் கலாச்சார ரீதியாக சற்று ஒடுக்கப்பட்டிருக்கிறோம். உண்மைகள் அத்துமீறப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.