ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு
தீவிர புயலான அம்பன்…!வானிலை மையத்தின் அலர்ட் மெசேஜ்!
Cyclone amphan warning
சென்னை:
வங்க கடலில் மையம் கொண்டுள்ள அம்பன் புயல் தீவிர நிலையை அடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அந்தமான் தீவு பகுதிகளிடையே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியிருக்கிறது. அதற்கு அம்பன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் உச்சக்கட்ட நிலையான அதி உச்ச உயர் தீவிர புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஒடிசா – வங்க தேசத்திற்கு இடையேயான பகுதியில் அம்பன் கரையை கடக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை.
மாறாக தமிழகத்தில் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கலாம் மற்றும் சில பகுதிகளில் மிதமான மழை பொழிவும், காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.