fbpx
RETamil Newsஇந்தியா

இனி மின்வெட்டு ஏற்பட்டால் இழப்பீடு வழங்கப்படும் – டெல்லி முதல்வர் அதிரடி!

புதுடெல்லியில் இனி வரும் நாட்களில் முன்னறிவிப்பு இல்லாமல் மின்வெட்டு செய்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.50 – 100 வரை வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இனிமேல் அறிவிக்கப்படாமல் மின்வெட்டு செய்தால் பயன்பாட்டாளர்களுக்கு மின்சாரத்துறை இழப்பீடு தொகையாக ரூ.5000 வரை வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ள அறிக்கையில் ,” நாட்டின் தலைநகரமான புதுடெல்லியில் இனி அறிவிக்கப்படாத மின்வெட்டு இருக்காது. அப்படி மின்தடை ஏற்பட்டால் பயன்பட்டாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டால் முதல் இரண்டு மணிநேரத்திற்கு 50 ருபையும், 2 மணி நேரத்திற்கு மேல் ஒவ்வொரு மணிநேரத்திற்கு 100 ரூபாயும், அதிகபட்சமாக 5000 ரூபாய் வரை வழங்கப்படும் என்று அதிரடி அறிவிப்பை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close