பீகாரில் அடையாளம் தெரியாத கும்பலால் முதியவர் பலி ; கால்நடை திருட வந்தவர் என குற்றச்சாட்டு
பீகார் மாநிலத்தில் உள்ள அராரியா மாவட்டத்தில் உள்ள சிமர்ப்பணி என்ற கிராமத்தை சேர்ந்த முகத் காபூல் என்ற 55 வயது முதியவர் அடையாளம் தெரியாத நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.அந்த முதியவர் தன்னை பாதுகாத்து கொள்ளவும் , தான் குற்றவாளி இல்லை என்று சொல்லவும் மிகவும் போராடி இருக்கிறார்.
இதையெல்லாம் பொருட்படுத்தாத அந்த கும்பல் அந்த முதியவரின் மார்பு, முகம் ஆகியபகுதிகளில் மிக கொடூரமாக தாக்கியுள்ளனர்.மேலும் அவர் உயிர் பிரிந்து கிழே விழும் வரை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இவ்வாறு முதியவரை கொடூரமாக கொலை செய்த அந்த அடையாளம் தெரியாத கும்பலுக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகைய செயலை செய்த அந்த கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அந்த முதியவரின் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த உறவினர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளதால் அப்பகுதியில் மிகுந்த பதட்டம் நீடிக்கிறது. மேலும் இந்த கும்பல் தாக்குதலுக்கு முழு காரணம் என்ன என்று தெரியவில்லை. எனவே அந்த பகுதியில் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. போலீஸ் தரப்பில் தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது.