தமிழக முதல்வர் அலுவலக தனிச்செயலாளர் கொரோனாவால் பலி…!
CM office secretary died in corona
சென்னை:
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அலுவலக தனிச்செயலாளர் உயிரிழந்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து வருகிற 30ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.
தமிழகத்தில், சமூக இடைவெளியை பின்பற்றாததால் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது.
குறிப்பாக, சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் 1,500ஐ தாண்டும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனிச்செயலாளர் தாமோதரன் உயிரிழந்துள்ளார்.
சென்னையில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமியின் அலுவலக தனிச்செயலாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது உயிரிழப்பை அடுத்து, தாமோதரனின் குடும்ப உறுப்பினர்களுக்கு சோதனை நடத்தப்பட உள்ளது.