fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

12ம் வகுப்பு தேர்வு எழுதியவரா நீங்கள்…? மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

Plus 2 retotalling from today

சென்னை:

12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த 16-ந்தேதி வெளியிடப்பட்டது. வழக்கமாக தேர்வு முடிவு வெளியான அன்றையதினமே விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு எப்போது விண்ணப்பிப்பது?, என்ற தகவல் தெரிவிக்கப்படும்.

ஆனால் இந்த ஆண்டுதேர்வுமுடிவு வெளியான 6 நாட்களுக்கு பிறகு அது குறித்த அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. அதன்படி, விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 அரியர் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இன்று முதலும், பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் நாளை(சனிக்கிழமை) முதல் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்.

தற்போது கொரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தை கருத்தில்கொண்டு, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பணியாளர்கள் பள்ளிக்கு வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close