fbpx
Others

கோவை சௌரிபாளையம் பகுதியில் அதிர்ச்சி சம்பவம்….?

நாகராஜ்கோவை சௌரிபாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ். இவர் கடந்த 6 ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழத்தார். இதனையடுத்து சௌரிபாளையம் மயானத்தில் நாகராஜன் உடலை,அவரதுமகன்வெங்கடேஷ்அடக்கம்செய்தார்.அப்போது தனது தந்தை மிகுந்த விருப்பத்துடன் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க நகையை அவரது உடலிலேயே அணிவித்து வெங்கடேஷ் புதைத்துள்ளார். 16 வது நாள் காரியம் முடிந்த பின்னர் கல்லறை கட்டி கொள்ளலாம் எனத் திட்டமிட்டு இருந்தனர்.இந்நிலையில் கடந்த வெள்ளி கிழமை 16 வது நாள் காரியத்துக்கு இடத்தைச் சுத்தம் செய்ய வந்தபோது, புதைக்கபட்ட இடம் தோண்டப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து மயானத்தில் இருக்கும் கார்த்திக் என்பவரைப் பிடித்து அடித்து விசாரித்துள்ளனர்.அப்போது, சக்திவேல் என்பவர் சிலருடன் கடத்த செவ்வாய் கிழமையன்று வந்து சடலத்தைத் தோண்டி எடுத்து 3.5 சவரன் நகையை மட்டும் கார்த்தி தூக்கிச் சென்று இருப்பதும்   சக்திவேல் உயிரிழந்த நாகராஜ் குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பதும் தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து  சடலத்தைத் தோண்டி எடுத்து நகையினைத் திருடி சென்றது தொடர்பாக வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில், சக்திவேல், மணிகண்டன், கார்த்திகேயன் ஆகிய 3 பேர் மீது பீளமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் மீது BNS 315 என்ற இறந்த நபரின் சொத்தைச் சட்டவிரோதமாகத் தனக்காகப் பயன்படுத்துதல் பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.இதே போல கைதான மணிகண்டன் அளித்த புகாரில், தங்க சங்கிலியைக் குறித்து கேட்டு தன்னைத் தாக்கியதாகப் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் மணி, ரஞ்சித், கார்த்தி ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த இரண்டு வழக்குகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close