ஓபி எஸ் பெரியகுளத்திற்கு வருகை : தொண்டர்கள் வரவேற்பு
தேனி, ஆக.1 -தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு வருகை புரிந்தார். கடந்த ஒரு மாதமாக சென்னையில் கட்சி அலுவல் பணிகளை கவனித்த பின்பு, இன்று வீடு திரும்பிய ஓபி எஸிக்கு கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். அப்போது, ஓபிஎஸ் வாழ்க ஓபிஎஸ் வாழ்க என்ற கோஷங்கள் எழுப்பினர். இந்த நிகழ்வில், தேனி மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம்.சையது கான், தேனி நகர செயலாளர் முருகேசன், மாவட்ட இணைச் செயலாளர் மஞ்சுளா முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், பெரியகுளம் நகர செயலாளர் அப்துல் சமது,அதிமுக நகர் மன்றக் குழு தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட பிரதிநிதி அன்பு, வழக்கறிஞர் தவமணி, கீழ வடகரை ஊராட்சி துணை செயலாளர் ராஜசேகர், குணமுத்து, ராஜ், ரெங்கராஜ், முத்துக்குமார், முத்துப்பாண்டி, கதிரேசன், நந்தகுமார், பழனிச்சாமி, உள்ளிட்ட கழக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்