சமத்துவக் கிருஸ்துமஸ் விழாவில் நடிகர் விஜய் பேசுகிறார்….?
நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் ஆரம்பித்த பின்னர், தீவிர அரசியலில் தற்போது தான் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் விதமாக செங்கோட்டையன். ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், சிடி நிர்மல் குமார் என பலரையும் கடந்த சில மாதங்களில் இணைத்துள்ளார். பல்வேறு யூடியூபர்கள், நடிகர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகளையும் தங்கள் கட்சியில் சேர்த்து வருகிறார் விஜய். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி யாருடன் என்பதை விஜய் அறிவிக்கவில்லை. இந்த முறை அவரை தனித்து நிற்கவே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.அவர் தனித்து நிற்பது யாருக்கு பாதகமாக போகிறது என்பது தெரியவில்லை.. அதேநேரம் அதிமுகவின்முக்கிய நிர்வாகிகளை தன் பக்கம் இழுப்பதில் விஜய் கவனம் செலுத்துவதை காண முடிகிறது. ஜெயலலிதா போலவே திமுகவை தீய சக்தி என்றுவிமர்சிப்பதுதொடங்கி,தற்போதுபாஜகவையும்மெல்லமெல்லவிமர்சிக்கதொடங்கிவிட்டார். இதன் காரணமாக திமுக மட்டுமின்றி அதிமுகவும் பாஜகவும் தவெகவை தற்போது விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள். அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில் ஒவ்வொரு நிகழ்வும் தேர்தல் கண்ணோட்டத்துடனும்,ஆதாயத்துடனும் பார்க்கப்படும்.இந்த சூழலில் தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் கிறிஸ்துமஸ் விழா ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போதும் கொண்டாடப்படுவது வழக்கம் ஆகும். அந்த வகையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள ‘ப்போர் பாயிண்ட்ஸ்’ கன்வென்ஷன் சென்டரில் இன்று காலை 10.30 மணிக்குநடைபெறுகிறது. சமத்துவக் கிருஸ்துமஸ் விழா என்ற பெயரில் நடைபெறும் இந்த விழாவில் நடிகர்விஜய்
கலந்து கொண்டு பேசுகிறார் இதில் 1500 பேர் கலந்துக்கொள்ளும் இந்நிகழ்ச்சியில், QR கோட் அனுமதிச்சீட்டு வைத்துள்ள நபர்களை மட்டும்அனுமதிஅளிக்கப்படுகிறது.கரூர்கூட்டநெரிசல்சம்பவம் காரணமாக,தீபாவளிபண்டிகைகொண்டாட்டங்களைகட்சியினர்தவிர்த்தநிலையில்,கிறஸ்துமஸ்விழாவைவிமரிசையாககொண்டாடதிட்டமிட்டிருக்கிறார்கள். இன்று நடைபெறும் விழாவில் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா,அருண்ராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளார்கள். இது ஒருபுறம் எனில், கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பது தொடர்பாக செங்கோட்டையன் உள்ளிட்ட தவெக நிர்வாகிகளுடன் விஜய், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் நேற்று ஆலோசனை நடத்தினார். அனேமாக டிடிவி தினகரனின் அமமுக, பாமக மற்றும் சில கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.