திமிரி–ஆபத்தான பொதுக் கிணற்றை சீரமைக்கக் கோரி மக்கள் சாலை மறியல்!
திமிரி சஞ்சீவிராயன் பேட்டையில் ஆபத்தான பொதுக் கிணற்றை சீரமைக்கக் கோரி மக்கள் சாலை மறியல்! திமிரி, அக்டோபர் 3: திமிரி சஞ்சீவிராயன் பேட்டை மீனவர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பொதுக் கிணறு பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கிணற்றின் சுற்றுச்சுவர்கள் இடிந்து விழும் நிலையில் இருப்பதால், அருகில் செல்லவே அச்சமாக உள்ளது என மக்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், நேற்று பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த திமிரி போலீசார் மற்றும் நகராட்சி, வருவாய்த் துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
