ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..,டெல்லி சட்டமன்றதேர்தல்–செய்தி..
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை
தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது; அதன் பிறகு 8.30 மணிக்கு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் சார்பில் சீதாலட்சுமி உள்பட 46 பேர் போட்டி. ஈரோடு இடைத்தேர்தலில் வாக்கு எண்ணப்படுவதை ஒட்டி வாக்கு எண்ணும் மையத்துக்கு 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி
தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.இதைத்தொடர்ந்து, டெல்லி சட்டமன்ற
தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப்போட்டி; 3வது முறையாக அரியணை ஏறுமா ஆம் ஆத்மி?; 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைக்குமா பாஜக? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக – 37 இடங்களிலும் ஆம் ஆத்மி – 27 இடங்களிலும், காங்கிரஸ் – 1
மனிஷ் சிசோடியா முன்னிலை. ஜங்புறா பகுதியில் துணை முதல்வர் தற்போது முன்னிலை. இதுவரை பின்தங்கி இருந்த நிலையில், தற்போது சிசோடியா முன்னிலை பெற்றார்.கடந்த மூன்று டெல்லி சட்டசபை தேர்தல்களில் இல்லாத அளவு AAP பின்னடைவை சந்தித்துள்ளது. டெல்லி முதல்வர், முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் துணை முதல்வர் பின்னிலை.