fbpx
Others

2½ கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்–ரூ.25 ஆயிரம் அபராதம்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி ராமநாதபுரம் பகுதியில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் பணியாளர்கள் மளிகை கடை, பெட்டிக்கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என்று சோதனை நடத்தினர்.அப்போது ஒரு கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட இரண்டரை கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்தனர். மாவட்ட நிருபர் சுரேஷ்குமார்

Related Articles

Back to top button
Close
Close