மதுராந்தகம் (தனி), தாராபுரம்(தனி) இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு…
.தமிழகத்தில் மதுராந்தகம் (தனி), தாராபுரம்(தனி) ஆகிய தொகுதிகளுக்கு அக்.6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள் ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் செப்.9-ல் தொடங்கி 16-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில் அதிமுக, தவெக, திமுக, நாம் தமிழர், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் என மதுராந்தகத்தில் 48 மனுக்களும், தாராபுரத்தில்51மனுக்களும்தாக்கல்செய்ப்பட்டன.இதையடுத்து வேட்புமனுக்கள் மீதானபரிசீலனைசெப்.17ம்தேதிநடைபெற்றது. இதில் மதுராந்தகம் தொகுதியில் 20 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 28 மனுக்கள் ஏற்கப்பட்டன. மேலும், தாராபுரம் தொகுதியில் 30 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான இறுதிநாளான நேற்று சுயேச்சை,முக்கிய கட்சிகளின் மாற்று வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை திரும்பப் பெற்றனர். அதன்பின் மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.அதன்படி மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் (தவெக), பரந்தாமன் (திமுக), கணிதா சம்பத் (அதிமுக), சுகந்தி (மார்க்சிஸ்ட்), ஜானகி ராமன் (நாம் தமிழர்) உட்பட 27 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதேபோல், தாராபுரம் தொகுதியில் சத்யபாமா (தவெக), சுகன்யா (திமுக), பானுமதி (அதிமுக), கார்த்திகா (நாம்தமிழர்), லட்சுமணன் (இந்தியகம்யூனிஸ்ட்) உட்பட 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.வேட்பாளர் பட்டியல் இறுதியானதை அடுத்து இவ்விரு தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் முடுக்கிவிட்டுள்ளன. அக்.9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இடைத்தேர்
தலை முன்னிட்டு மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் அக். 6-ம் தேதி பொது விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது. அந்ததொகுதிகளுக்குஉட்பட்டபகுதிகளில்உள்ளஅனைத்துஅரசுஅலுவலகங்கள்,கல்விநிறுவனங்கள்,அரசின்கட்டுப்பாட்டில்இயங்கும்நிறுவனங்கள்மற்றும்தொழில்நிறுவனங்களுக்குஅக்.6ம்தேதிவிடுமுறைஅளிக்கப்படுகிறது.மேலும்,இந்த2தொகுதிகளில்வாக்காளர்களாகப் பதிவு செய்திருந்து, செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில்பணியாற்றும்அனைத்துதனியார்மற்றும்அரசுப்பணியாளர்களுக்கும் வாக்குப்பதிவு நாளான அக்.6-ம் தேதி ஊதியத்துடன் கட்டாய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று தலைமைச் செயலர் எம்.சாய் குமார் உத்தரவிட்டுள்ளார்.