fbpx
RETamil Newsதமிழ்நாடு

கொரோனா வைரஸ் ; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீரை குடிக்கலாம் – தமிழக அரசு

உலகம் முழுவதும் இன்று கொரோனா வைரஸ் தாக்கி வருவதோடு நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் பெரும் பயத்தால் அவதிப்படுகின்றனர்.

இதற்கு ஒரு தடுப்பு முயற்சியாக பொதுமக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும் எனவும், அதற்க்கு மக்கள் கபசுர குடிநீர், நிலவேம்பு கஷாயம் குடிக்கலாம் எனவும் தமிழக அரசு கூறியுள்ளது.

இதற்காக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் திட்டமான ” ஆரோக்கியம்” என்ற சிறப்பு திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.

இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு முதல்வர் பழனிசாமி கபசுர குடிநீரை வழங்கினார்.

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் முதல் முயற்சியாக நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ளவேண்டும்.இந்த கொரோனா வைரஸ் தொற்றானது முதலில் நோய் எதிர்ப்பு குறைவாக உள்ள முதியவர்கள் மற்றும் குழந்தைகளை தான் தாக்குவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் இந்த நோய் தொற்றின் பாதிப்பு எளிதில் நமக்கு ஏற்படாமல் இருக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு கஷாயத்தை மக்கள் குடிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் சிலர் இந்த இரண்டு கஷாயத்தையும் குடித்தால் நமக்கு கொரோனா வராது என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அவ்வாறு நினைக்கும் மக்களுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது; அது பின்வருமாறு,

நிலவேம்பு, கபசுர குடிநீர் கொரோனாவுக்கான மருந்து கிடையாது என்றும், இது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்காக மட்டும் தான் என்றும் விளக்கியுள்ளது.

சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஒரு லட்சம் குடும்பத்திற்கு கபசுர குடிநீர் சூரணப்பொட்டலங்கள் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close