Others
விழாக்கோலத்தில் உத்தமபாளையம்…..
தென்காளஹஸ்தி என அழைக்கப்படும் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் திருக்காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை திருக்கோவில் குடமுழுக்கு விழா மார்ச் 20ம் நாள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற இருக்கிறது .அமைச்சர்கள் சேகர்பாபு, பிடிஆர், மற்றும் ஐ.பெரியசாமி சட்டமன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணன், ஓ.பி.எஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், தேனி மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் போன்ற முக்கிய நபர்கள் பங்கு பெற உள்ளனர்.