Others
ரத யாத்திரை வேலூர் மாவட்டத்தை வந்தடைந்தன
அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் பாலாறு மக்கள் இயக்கம் பாலாறு நதி நீர் பாதுகாப்பு விழிப்புணர்வு ரதயாத்திரை பாதயாத்திரையாக இன்று வேலூர் மாவட்டத்தை வந்தடைந்தது. நம்மை வாழவைக்கும் அன்னை பாலாறு நதியை நாம் தூய்மையோடு வைப்பதோடு கர்நாடகம் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் உள்ள ஏரிகள் குளங்கள் கிணறுகள் மற்றும் கிளை ஆறுகளையும் பாரம்பரிய நீர்நிலைகளையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு உள்ளது வான் மேகம் மழை பொழிந்து நீர் வளம் பெருகவும் அதன் மூலம் விவசாயம் தழைக்கவும் குறைவின்றி உயிர்கள் வாழவும் அன்னை பாலாற்றை வணங்குவோம் அன்னை பாலாற்றின் தூய்மையைப் பாதுகாக்க உறுதி ஏற்போம் என்ற குறிக்கோளை நோக்கி ரத யாத்திரை வேலூர் மாவட்டத்தை வந்தடைந்தன