fbpx
Others

நெல்லை–நான்குநேரியில் சர்வதேச மகளிர் தின விழா…

நெல்லை மாவட்டம் நான்குநேரியில் வழக்கறிஞர்கள் சங்கம் நடத்திய சர்வதேச மகளிர் தின விழா…நான்குநேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 8.3.2024 – ம் தேதி நாங்குநேரிவழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது.விழாவை நான்குநேரி மாவட்ட உரிமையியல் நீதிபதி திருமதி. சுபாஷினி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும், பாட்டு போட்டி பேச்சு போட்டி முதலியன நடைபெற்றது.விழாவில் வழக்கறிஞர் மகேஸ்வரி வரவேற்புரை வழங்கினார்.நாங்குநேரி சார்பு நீதிபதி மாண்புமிகு.ராமதாஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்,விழாவினை நாங்குநேரி வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் M. சுப்பையா அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். சங்கத்தின் செயலாளர் S.செல்லத்துரை A. C.பேச்சிமுத்து ஆகியோர் முன்னிலை வைத்து வாழ்த்துரை வழங்கினர்.நாங்குநேரி அரசு வழக்கறிஞர்கள் K. பாலசுந்தர் ,S. சுகந்தி, சங்கத்தின் கூடுதல் செயலாளர் P. M.முருகன் ,முன்னாள் அரசு வழக்கறிஞர் L. K. மாரியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .விளையாட்டு போட்டிகளை வாழக்கறிஞர் சதீஸ்குமார் சிறப்பாக நடத்தினார்.இறுதியில் செயற்குழு உறுப்பினர் A. கலையரசி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.விழாவில் சங்கத்தின் துணைத் தலைவர் N. ராஜேஷ் கண்ணன் மூத்த வழக்கறிஞர் N.K. வானு மாமலை செயற்குழு உறுப்பினர்கள் A. நித்யானந்தி T. முருகேசன், M.ராஜா, வழக்கறிஞர்கள் சிவசந்திரன், சாமுவேல்பிரின்ஸ்,ராகவேந்திரன்,ரமேஷ்,மணியன்சேதுபதி,விவேகானந்தர்,  மிதின் ராஜ்,ஆனந்தகுமார், சுனைனா கோபி, பத்மபிரியா, தனு, சுகிர்தா, இலக்கியா, வெண்ணிலா பாரதி, ஸ்ரீஜா, நீதிமன்ற ஊழியர்கள், காவல்துறையினர், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்…

Related Articles

Back to top button
Close
Close