கடம்பூர் மலைப்பகுதியில் கடும் பனி மூட்டம்….
கடம்பூர் மலைப் பகுதியை மூடிய பணி மூட்டம் .பட விளக்கம்..கீழே
ஈரோடு மாவட்டம் டிச.03- சத்தியை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 1200 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட சிறிய மலை கிராமங்கள் உள்ளன. சத்தி புலிகள் காப்போம் வனப்பகுதி கடம்பூர் மலைப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன. இங்கு ள்ள மலைக் கிராமமக்கள் கால்நடை வளர்ப்பு, விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடம்பூர் மலைப்பகுதியில் மழைக்காலமாக கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக வாகனங்கள் சென்றவர்கள் மிஸ்ட் லைட் எரிய விட்டபடி சென்றனர். மலை கிராம மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளைச் செய்ய முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்கள். காலை 6 மணி முதல் 10 மணி வரை பனிமூட்டம் விலகாமல் இருப்பதால் கடம்பூர் மலைப்பகுதியில் ஆடு,மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்ல முடியாமலும், விவசாய பணிகளுக்கு செல்ல முடியாமலும் கிராம மக்கள் வீடுகள் இருக்குலையே முடங்கியதால்விவசாயப்பணிகள்பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். Dist.Reporter suresh kumar.