தேனி–ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சாலை மறியல்
தேனிமாவட்டம் 29/03/2023
தேனிமாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சாலை மறியல் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு _பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தேனிமாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்மண்டல செயலாளர் M.K.M.முத்துராமலிங்கம் வழக்கறிஞர் தலைமையில் ஆர்ப்பாட்டம் இதில் வழக்கறிஞர்கள் செல்வம். போடி இராதாகிருஷ்ணன். ஜெயராஜ்.ராமகிருஷ்ணன்.பாலமுருகன்.அழகேந்திரன்.போடி கனி தீபக்குமார் .உள்பட வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது தூத்துக்குடியில் வக்கீல் முத்துகுமார் கொலைசெயப்பட்டதற்கும், சென்னை சைதாப்பேட்டையில் வக்கீல் ஜெய்கணேஷ் கொலைக்குகாரணமான குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் மேலும் மத்திய மாநில அரசுகள் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.