RETamil News
கொரோனா பரிசோதனை மையங்கள் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் உள்ளன – விஜயபாஸ்கர்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் நாடெங்கும் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மகாராஷ்டிராவைவிட தமிழகத்தில் தான் அதிக அளவில் கொரோனா ரத்த மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்தியாவிலேயே அதிகமான கொரோனா பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் தான் உள்ளன என சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.















