Others
சென்னை மேற்கு மாவட்டம் புழல் மண்டல் சார்பில் பொங்கல் விழாநடந்தது–சிறப்பு செய்தி.
சென்னை மேற்கு மாவட்டம் புழல் மண்டல் சார்பில் பொங்கல் விழாநடந்தது. மண்டல் செயலாளர். உஷாகருணாகரன் ஏற்பாட்டில் புழல் மண்டல் தலைவர். ரஜினி தலைமையில் நடந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட தலைவர். மனோகரன், மாவட்ட பொதுசெயலாளர். குமரன், சத்யா கலந்து கொண்டனர். சுவையான சக்கரை பொங்கல் வைத்த பெண்களுக்கும், இசைநாற்காலி போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கும் பரிசு பாத்திரங்கள், ரொக்கபரிசு வழங்கப்பட்டது. மேலும் இதில் கலந்து கொண்ட பெண்களுக்கும் பொங்கல் வைக்க சில்வர் பாத்திரங்கள் வழங்கப்பட்டது.பிரகாஷ்,மண்டல் செயலாளர். அருண் குமார், மற்றும் முரளிகிருஷ்ணன், குமார், ஹரி கிருஷ்ணன், ஆனந்த், முருககனி, வாசுகி, ஹாசீனா, சுப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
