fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

பீகாரில் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து !

பீகார் மாநிலத்தில் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 9 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

பீகாரின் வைஷாலி பகுதியில் வந்து கொண்டிருந்த சீமாஞ்சல் விரைவு ரெயிலின் 9 பெட்டிகள் இன்று அதிகாலை 3.52 மணியளவில் தடம் புரண்டு விபத்திற்குள்ளாகின.

பீகார் மாநிலம் வைஷாலி அருகே சீமாஞ்சல் விரைவு எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியதில் 6 பேர் வரை பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த கோர விபத்தில் ரயில் பெட்டிகளில் பயணம் செய்த பயணிகள் 6 பேர் பலியாகி இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ரயில் விபத்தில் பலர் காயம் அடைந்துள்ளனர். மேற்படி விபத்து குறித்து பிற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் விரைவில் நடைபெற்று வருவதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close