fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

கொரோனா காலத்தில் மற்ற நாடுகளை விட சிறப்பான செயல்பாடு..! மத்திய அரசு பெருமிதம்!

India reacted best in covid 19 situations says minister harshvardhan

டெல்லி:

எந்த நாட்டையும் விட கொரோனா தொற்றில் சிறப்பாக செயல்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்து உள்ளார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் ராஜ்குமாரி அமிர்த கவுர் என்ற கட்டிடத்தை அவர் இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஸ்வினி சவுபேயும் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேசியதாவது: இவ்வளவு அதிக மக்கள் தொகை கொண்ட தேசமாக இருந்தபோதிலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் நாம் மற்ற நாடுகளை விட நான் சிறப்பாக செயல்பட்டோம்.

இந்தியாவில் கொரோனாவால் இறப்பு விகிதம் 2.57% மற்றும் குணமடைந்தோர் விகிதம் 63.25% ஆக உள்ளது. மற்ற நாடுகளில் இதுபோன்று கிடையாது என்று கூறினார்.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close