ராணிப்பேட்டை–பெயருக்குத்தான் விவசாய குறைத்திர்வு கூட்டமா….?
பெயருக்குத்தான் விவசாய குறைத்திர்வு கூட்டம்
பெரும்பாலும் அதிகாரிகள் கோரிக்கையை நிறைவேற்றுவதே கிடையாது கலவை
விவசாயிகள் சாடல்
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை
வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் 08.05.25 அன்று நடைபெற்றது இக்கூட்டத்திற்கு சமூக நல தாசில்தார் சரவணன் தலைமை தாங்கினார், கலவை கமிட்டி சூப்பிரெண்ட், கலவை நகராட்சி செயல் அலுவலர், எலக்சன் பிரிவு தாசில்தார் பாஸ்கர் உள்ளிட்டோர் முன்னில வகித்தனர்இக்கூட்டத்தில் அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையே காரசார விவாதங்கள் நடைபெற்றன பொதுநல சங்கம் தலைவர் நாராயணன், செயலாளர் நெல்லூர் சம்பத் பேசியபோது கலவை சென்ன சமுத்திரம் காலவை அங்காளபரமேஸ்வரி கமலக்கண்ணியம்மன் கோயில் எதிரே செயல்பட்டு வரும் அரசு நூலகம் நுழைவாயிலில் உள்ள இடத்தை தனிநபர் ஆக்கிரமித்து கடைகளை கட்டிவாடகைக்கு விட்டு சம்பாதித்து வருகின்றனர் நூலகத்திற்கு உள்ளே செல்லும் வழி நெருக்கமாக உள்ளதுநூலகத்திற்கு வந்து செல்லும் பொதுமக்கள் தாங்கள் எடுத்து வரும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு இடம் இல்லாததால் சாலையிலே விட்டு செல்கின்றனர் இதனால் போக்குவரத்து நெரிசலும் விபத்து ஏற்படும் அபாய நிலையில் உள்ளதுநூலக கட்டிடம் அருகில் கட்டப்பட்டிருக்கும் இரு கடைகளையும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டனர்மேலும் விவசாயிகள் கேள்வி எழுப்பிய போது விவசாயிகளின் கோரிக்கைகளை வருவாய்த்துறை அதிகாரிகள் நிறைவேற்றுவதே கிடையாது கிடப்பில் போடுகின்றனர் மேலும் நிலம் சம்பந்தப்பட்ட மோசடிகள் மற்றும் குற்றச்சாட்டுகளை துறை சார்ந்த அதிகாரிகளிடம் தெரிவித்தால் அவர்கள் நாங்கள் சொல்வதை அப்படியே எதிர் தரப்பினரிடம் சொல்லி கலக்கம் செய்து சண்டையை மூட்டி விடுகின்றனர்இது போன்ற தகுதியற்ற வேலையை செய்வதை அதிகாரிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டனர் அதனைத் தொடர்ந்து கலவை அடுத்த அலாளச்சேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சந்திரன் பேசுவையில் இரண்டு மாத காலமாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் நில அளவை சர்வேரிடம் நிலத்தை அளக்கவும், சப்ஜிஷன் செய்யவும் முறையாக பதிவு கட்டணம் செலுத்தி அழைத்தால் சரியான முறையில் அளந்து கல் போட்டும் தரவில்லை, மரியாதையாகவும் பேசவில்லை எதைக் கேட்டாலும் அமைதியாக சென்று விடுகிறார்கள் நீங்களே
கல் போட்டுக் கொள்ளுங்கள் என்கிறார்கள்நாங்களே அளவீடு செய்து கல் போட்டுக் கொள்வதற்கு இவர்கள் எதற்கு அதிகாரிகள் விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கு வருவாய்த்துறையினர்கெடுபிடி செய்து அலைகழித்து வருகிறார்களே தவிர தீர்வு காண எந்த முடிவையும் செய்யவில்லை பேருக்கு தான் விவசாய குறைகள் தீர்வு கூட்டம் நடக்கிறது உண்மையாகவே எந்த அதிகாரிகளும் விவசாயிகளின் குறைகளை தீர்த்து வைப்பதே கிடையாது என்பதுதான் நிதர்சனமான உண்மை எனவே இது போன்ற அதிகாரிகள்
மீது மாவட்ட ஆட்சியர் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்இக்கூட்டத்தில் திமிரி ஒன்றிய விவசாய சங்க தலைவர் ஏகாம்பரம்,பொருளாளர் ராஜன், ஆயிரம் மங்கலம் விவசாயி அம்பிகாபதி, பொதுநல சங்கத் தலைவர் நாராயணன், செயலாளர் நெல்லூர் சம்பத் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் வட்ட வழங்கல் அலுவலர் பரமேஸ்வரி நன்றி கூறினார்.