திருவண்ணாமலைக்கு வர வெளிமாவட்ட நபர்களுக்கு அனுமதி கிடையாது…! கலெக்டர் உத்தரவு!
Thiruvannamalai collector order over corona restriction
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வெளி நபர்கள் நுழைய அனுமதி இல்லை என்று ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு மிக அதிகம் என்பதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் 19 தேதி முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு என்று தமிழக அரசு அறிவித்தது.
இந் நிலையில் வெளியூரில் இருந்து அனுமதி இல்லாமல் வருபவர்கள் மூலமாக திருவண்ணாமலையில் தொற்று பரவுகிறது. அதன் காரணமாக வெளி மாவட்ட நபர்களுக்கு அனுமதி கிடையாது என்று கலெக்டர் கந்தசாமி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வெளிமாவட்டங்களில் இருந்து பலர் முறையாக அனுமதி இல்லாமல் வருகின்றனர். அவர்கள் மூலமாக நோய் பரவ வாய்ப்புகள் இருக்கிறது. மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ. 100 அபராதம் விதிக்கப்படும் என்று கூறி உள்ளார்.