fbpx
Others

செங்குன்றம்—போதை ஒழிப்பு விழிப்பு உணர்வு நிகழ்வு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆகஸ்ட் 11 போதை விழிப்புணர்வு தினமாக அறிவித்துள்ளதை முன்னிட்டு செங்குன்றம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் போதை விழிப்பு உணர்வு நிகழ்வை பள்ளி தலைமையாசிரியர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.மாதவரம் சட்டமன்ற உறுப்பினரும் சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளருமான மாதவரம் எஸ்.சுதர்சனம், செங்குன்றம் காவல் மாவட்ட உதவி ஆணையர் முருகேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளிடையே போதையை பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தி உறுதிமொழியை வாசித்தனர்.இதில் செங்குன்றம் பேரூர் கழக செயலாளரும் பேரூராட்சி முன்னாள் தலைவருமான ஜி.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெ.ஜெய்மதன், பேரூராட்சி தலைவர் கே.தமிழரசி குமார், பேரூராட்சி துணைத்தலைவர் ஆர்இஆர். விப்ரநாராயணன், ஒன்றிய துணைச் செயலாளர் ஆர்.டி.குமார், செங்குன்றம் பேரூர் கழக அவைத்தலைவர் டி.அருள்தேவநேசன், முன்னாள் ஒன்றிய அவைத்தலைவர் இ.பாஸ்கர், துணைச் செயலாளர்கள் ஆர்.சீனிவாசன், கே.கபிலன், மாவட்ட பிரதிநிதி ஆர்.டி.சுரேந்தர், ஒன்றிய பிரதிநிதிகள் பி.அன்பு, ஆர்எம்பி. குமார், ஜெ.ஜெய்மாறன், என்எம்டி. இளங்கோவன், கவுன்சிலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.இந்நிகழ்வில் ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவிகள் போதையை ஒழிக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close