பொறியியல் கல்லூரி விரைவில் மூடப்படுமா? அடுத்தடுத்து செய்திகள் வரும்..?
செங்குன்றம் அருகே உள்ள……..பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை மிகவும் மந்தமாக இருக்கிறது.தரமான ஆசிரியர்கள் பற்றாக்குறை,தகுதியற்ற ஆசிரியர்கள்குறைந்த சம்பளத்தில் வேலைபார்ப்பது வேதனை.கல்லூரி கட்டணம் மிக அதிகம்,மாணவர்களுக்கு உணவு ஏற்பாடு கேன்டியனில்சுகாதாரமின்றி இருக்கிறது.கல்லூரிகட்டப்பட்டுள்ள இடம் பெரும்பாலும் பொதுப்பணித்துறை,ஏரி புறம்போக்கு மற்றும் மத்திய ராணுவத்திற்கு சொந்தமான இடத்தில் கல்லூரியை கட்டி உள்ளதாக தெரிகிறது.கல்லூரியில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சரிவர சம்பளம் வழங்கப்படவில்லை என்பதும் ஆசிரியர்களுக்கு பல மாதங்கள் சம்பளம் பாக்கி உள்ளதாகவும் தெரிகிறது. கழிப்பறைகளும் சுகாதாரமின்றி இருப்பதாக தெரிகிறது இதனை உடனடியாக மாவட்ட நிர்வாகம், உயர் கல்வித்துறை நிர்வாகிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.மேலும் கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து படத்துடன் உரிய முறையில் அடுத்தடுத்து செய்திகள் வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.