புதிதாககொரோனா தொற்று உறுதி நாடுமுழுவதும் முன்னெச்சரிக்கை அவசியம்….
நாடுமுழுவதும்கொரோனாதொற்றால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 7,000-ஐ தாண்டியுள்ள நிலையில், பிரதமர் மோடியைச் சந்திப்பவர்கள் கட்டாயமாக ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. டெல்லி முதல்வர் ரேகா குப்தா, டெல்லியைச் சேர்ந்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட சுமார் 70 பாஜகவினர் மாலை பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளனர்.இந்த சந்திப்பிற்கு முன்னதாக, அவர்கள் அனைவரும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக நாட்டின்கொரோனாபாதிப்புகள் அதிகரித்து வருவதால், ஒன்றிய சுகாதார அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 306 பேருக்குபுதிதாககொரோனா தொற்றுஉறுதிசெய்யப்பட்டுள்ளது.டெல்லியில்நேற்றுமட்டும்66புதியபாதிப்புகள்பதிவானதைஅடுத்து,அங்குசிகிச்சைபெறுவோரின்மொத்தஎண்ணிக்கை757ஆகஉயர்ந்துள்ளது.மருத்துவ மனைகள்தயார்நிலையில்இருக்கவும்,ஆக்சிஜன்,தனிமைப்படுத்தப் பட்ட படுக்கைகள், வென்டிலேட்டர்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் இருப்பை உறுதி செய்யவும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. தொற்று பாதிப்புகள் அதிகரித்தாலும், மிகக் குறைந்த அளவிலானோருக்கே தீவிர உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுவதால் மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும், இருப்பினும் முன்னெச்சரிக்கை அவசியம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.