கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகிமை சங்கம் கோரிக்கை மனு…

நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகிமை சங்கம் உறுப்பினர்கள் கோரிக்கை மனு...
நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகிமை சங்கம் உள்ளது, பதிவு எண் 8/1951 ஆகும்.கடந்த 2003 முதல் தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 1800 வரிதாரர்கள் உள்ளனர்.3 வருடத்திற்கு ஒரு முறை தேர்தல் நடைபெற்று நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுபொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.கடைசியாக உயர் நீதிமன்ற மதுரை கிளை நியமனம் செய்த தேர்தல் அதிகாரி மூலம் 03.02 2017 ல் நடைபெற்ற தேர்தலில் திரு ஜெபஸ்டின் ஆனந்த் என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .அவரது பதவி காலம் மூன்று வருடம் அதன்பின் தேர்தல் நடத்தாமல் தேர்தல் நடந்ததாக முறைகேடு செய்து அவரே தலைவராக மீண்டும் இருந்து வருகிறார் தற்போது 08.08 .24 அன்று பதவி காலம் முடிவடைகிறது தற்போதும் தேர்தல் நடத்த எந்தவித அறிவிப்பும், வேலைகளும் நடைபெறாமல் உள்ளது. ஆதலால் தேர்தல் முறையாக நடத்த நடவடிக்கை எடுக்கும்படி தெற்கு கள்ளிகுளம் ஊர் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.