ஊரடங்கு நீட்டிப்பா? கலெக்டர்களுடன் முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை!
CM Edapaddi palanisamy discussion
சென்னை:
ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க ஜூலை 31 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் அதிகரித்து வரும் தொற்றை தடுக்க மாநிலம் முழுவதுமே ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீடிக்க இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தியதன் தொடர்ச்சியாக, மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை காலை காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.