fbpx
Others

புழல்—வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

தமிழகத்தில் சென்னை. திருப்பூர். உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழைநீர் கால்வாய் அமைத்தல் .கட்டிடப் பணி. ஓட்டல்களில் வேலை பார்ப்பது போன்ற பல்வேறு தொழில்களில் லட்சக்கணக்கான வடமாநிலத்தவர்கள் குடும்பத்துடன் வந்திருந்து வேலை செய்து வருகிறார்கள் சில இடங்களில் வட மாநில தொழிலாளர்களுக்கும் அந்தப் பகுதியை சேர்ந்தவர்களுக்கும் மோதல் போக்கு இருந்து வருவதாகவும் அவர்களுக்கு அச்சுறுத்தல் நிலவி வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது.  இதை தொடர்ந்து வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் பற்றிய செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். அவர்களுக்கு உரிய பாதுகாப்பை அளிப்போம் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் உறுதி அளித்தார்.இதனை அடுத்து பல்வேறு இடங்களில் காவல்துறை சார்பில் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது.புழல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வேலை பார்க்கின்ற வட மாநில தொழிலாளர்கள் அச்சத்தை போக்க தனியார் திருமண மண்டபத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.புழல் சரக காவல் உதவி ஆணையர். ஆதிமூலம் இன்ஸ்பெக்டர். சண்முகம் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.புழல் பகுதியில் தங்கி வேலை பார்க்கின்ற வட மாநில தொழிலாளர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை அச்சுறுத்தல் தொடர்பாக வரும் செய்திகளை நம்ப வேண்டாம்.தமிழ்நாடு அரசும் காவல்துறையும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் எதிர்ப்புகள் ஏதேனும் வந்தால் காவல் நிலையத்தை அணுகலாம் .அல்லது ஆய்வாளர். உதவி ஆய்வாளர் அலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி ஆணையர் ஆதிமூலம் கூறினார்.வட மாநில தொழிலாளர்கள் அச்சமின்றி இருப்பதை பிரதிபலிக்கும் விதமாக தங்கள் செல்போனில் டார்ச் லைட்டை அடித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்..

Related Articles

Back to top button
Close
Close