GeneralRETrending Nowஇந்தியா
மும்பையில் உயரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…! சீனாவின் உகானை முந்தியது!
Mumbai overtakes chinas wuhan
மும்பை:
கொரோனா தொற்றில் சீனாவின் உகான் நகரை மும்பை முந்தி உள்ளது.
கொரோனா வைரஸ் முதலில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டது. கொரோனாவால் 50 ஆயிரத்து 333 பேர் பாதிக்கப்பட்டனர். 3 ஆயிரத்து 869 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவின் மும்பையில் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை கடந்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 760 ஆக இருக்கிறது.
மகாராஷ்டிராவின் தகவல்படி 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 259 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. மாநிலத்தில் 90,787 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இது ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் பதிவான தொற்றில் 4ல் ஒரு பகுதியாகும். 42,638 பேர் ஏற்கனவே மிகவும் தொற்று நோயிலிருந்து குணம் பெற்றுள்ளனர்.