fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

புத்தாண்டு கொண்டாட்டம் – குடிபோதையில் வாகனம் ஓட்டிய 263 நபர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து !!

புத்தாண்டின் உற்சாக கொண்டாட்டத்தின் போது மது அருந்தி வாகனம் ஒட்டிய 263 நபர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட போவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எந்தவித பிரச்சனைகளின் ஏற்படாமல் இருக்க நகரம் முழுவதும் 368 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பின் ஈடுபட்டு இருந்தனர்.

அதுமட்டுமின்றி கிண்டி, அடையாறு , தரமணி, நீலாங்கரை துரைப்பாக்கம் போன்ற இடங்களில் இருசக்கர வாகன பந்தயம் தடுப்பு நடவடிக்கையாக 20 கண்காணிப்பு குழுக்களாக அமைக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது அருந்தி வாகனம் ஒட்டியதாக 263 நபர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் அவர்களது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்துக்கு அலுவலகங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close