திறக்கப்படும் டாஸ்மாக்? க்ரீன் சிக்னல் தந்த சுப்ரீம் கோர்ட்!
Apex court bans chennnai high court order over tasmac issue
டெல்லி: டாஸ்மாக் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஊரடங்கால் மூடப்பட்ட மதுக்கடைகள் தமிழகத்தில் கடந்த 7ம் தேதி, திறக்கப்பட்டது. மதுக்கடைகளில் நீதிமன்ற நிபந்தனைகள் பின்பற்றப்படாததால், அவற்றை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. வழக்கில் இன்று விசாரணை நடந்தது. அப்போது ஆன்லைனில் மது விற்பது இப்போதைக்கு சாத்தியமில்லை. இருப்பினும் அரசு கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடுவது சரியல்ல.
எனவே சென்னை நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. வழக்கை விசாரித் நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தனர்.
ஆகையால் ஒரு சில நாட்களில் மதுக்கடைகள் திறக்கப்படும் என தெரிகிறது.இது தொடர்பான மற்றொரு மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. அப்போது உச்ச நீதிமன்ற தடை குறித்து தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கை தொடர்ந்து விசாரிப்பது உகந்தது அல்ல என்ற நீதிபதிகள் எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் வழக்கை மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.