மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ.1000 கோடி வழங்க வேண்டும் – முதல்வர் பழனிசாமி கோரிக்கை
கொரோனா தடுப்பில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று 27-ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடனும் காணொலி மூலமாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமியும் கலந்துகொண்டார்.
பிரதமருடன் நடத்தப்பட்ட ஆலோசனை போது தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் விவரம் பின்வருமாறு ;
” தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.தமிழக அரசு எடுக்கின்ற சிறப்பான நடவடிக்கையால் கொரோனா இறப்பு விகிதம் 1.2 சதவீதமாக குறைந்துள்ளது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக வேளாண் உற்பத்தியாளர் அமைப்புக்கு மத்திய அரசு போக்குவரத்து மானியம் வழங்க வேண்டும்.
டிசம்பர் , ஜனவரி மாதத்திற்க்கான ஜி எஸ் டி இழப்பீட்டு தொகை உடனடியாக வழங்க வேண்டும். தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதலாக பிசிஆர் டெஸ்ட் கிட்டுகள் அனுப்பி வைக்க வேண்டும். தமிழகத்தில் 30 அரசு ஆய்வகங்கள் , 11 தனியார் ஆய்வகங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இலவசமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
சிறு, குறு தொழில் துறையினர் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளதால் அவர்கள் ஜி எஸ் டி வருமான வரி செலுத்த 6 மாத கால அவர்காசம் அளிக்க வேண்டும். கொரோனா சிகிச்சைக்கு ,மருத்துவ உபகரணங்கள் வாங்க, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1000 கோடியை வழங்க வேண்டும்.பிசிஆர் கருவிகளை மத்திய அரசு கூடுதலாக வழங்க வேண்டும் ” உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் வைத்துள்ளார்.