fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

2 லட்சம் பேருக்கு கொரோனா…! என்ன செய்யலாம்..? தவிக்கும் சுகாதாரத்துறை

2 Lakh corona patients in india

டெல்லி:

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது, சுகாதாரத்துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வரவில்லை. மார்ச்சில் இருந்து ஊரடங்கு உத்தரவு இருந்தும் கொரோனா வீரியமாக இருக்கிறது.

இந் நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்களை கொரோனா பாதித்துள்ளது.

மொத்த பாதிப்பு 2,05,045 ஆகும். இந்தியாவில் அதிகளவாக மகாராஷ்டிராவில் 72,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவை அடுத்து தமிழகத்தில் 25,586 பேர், டெல்லியில் 20,834 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 17,615 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது.

கொரோனா பலி எண்ணிக்கை 5,780. குணம் பெற்றவர்களின் எண்ணிக்கை 1 லட்சம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close