fbpx
RETamil Newsதமிழ்நாடு

சென்னை மக்களே உஷார்!2 நாட்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

சென்னையில் சில பகுதிகளில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் டிச.27, 28ல் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் இந்த தட்டுப்பாடு ஏற்படும் எனவும்  கூறப்படுகிறது.

எனவே மயிலாப்பூர், மந்தைவெளி, திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, அடையாறு, வேளச்சேரி, பெசன்ட் நகர், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை போன்ற பகுதிகளில் குடிநீர் தடுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என மெட்ரோ வாட்டார் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close