Others
பறிமுதல்செய்யப்படும்வாகனங்கள்–ஆட்டோ.,இருசக்கர வாகனங்கள்…
ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களை சரக்கு வாகனங்களாக பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து ஆணையர் கிரண் குராலா உத்தரவிட்டுள்ளார்.ரேபிடோ, ஊபர், போர்ட்டர் செயலிகள் மூலம் சரக்கு ஏற்றிச் செல்லப்படுவதாக கிடைத்த புகாரைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் திடீர் சோதனை நடத்தி, சம்பந்தப்பட்ட செயலிகள் வாயிலாக இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதோடு, விவரங்களை ஆணையரகத்திற்கு தெரிவிக்குமாறும் கூறப்பட்டுள்ளது.