திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்…!
.திருவள்ளுவர் கிழக்கு மாவட்ட பாஜக புதிய தலைவராக பம்மது குளம் செந்தில்குமார் நியமிக்கப்பட்டார்.. மற்றும் பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் செங்குன்றம் அருகே காந்திநகர் காமாட்சி திருமண மண்டபத்தில் நடந்தது . புதிய மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் . நரேஷ் குமார் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில நிர்வாகிகள் பாஸ்கரன். சக்கரவர்த்தி. வினோஜ் பி. செல்வம் மற்றும் கேஆர் வி கல்வி அறக்கட்டளை தலைவர் கே. ஆர்.
வெங்கடேசன் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புழல் ஒன்றிய தலைவர் முரளி கிருஷ்ணன். சோழவரம் தெற்கு ஒன்றிய தலைவர் பத்மநாபன். முன்னாள் மாவட்ட தலைவர் ராஜா. சுந்தரம். ஜெயச்சந்திரா.. அருண்குமார். நாகராஜ். முரளி செட்டியார். நரேஷ். சீனிவாசன்.முருககனி. ரஜினி.சம்பத் ..ரவி. அரிகிருஷ்ணன். ரேவதி . கலையரசி. வாசுகி.ஹசீனா. மாலா .செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில நிர்வாகிகள் செங்குன்றம் காமராஜர் சிலை. பம்மது குளம் அம்பேத்கர் சிலை ஆகியவற்றிற்கு மாலை அணிவித்தனர் .செங்குன்றத்தில் இருந்து மாநில நிர்வாகிகள் இருசக்கர வாகன ஊர்வலமாக கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.