fbpx
OthersREஉலகம்

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் – 2400 பேர் உயிரிழப்பு

உலகையே இன்று கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கும் மேல் பரவி அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது.

இத்தாலி, இஸ்பெயின் , அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த கொரோனா வைரஸானது மக்களை பெருமளவில் பாதித்துள்ளதால் அங்குள்ள அதிபர்களும், அரசியல்வாதிகளும் கண்ணீர் வடித்துக்கொண்டுள்ளார்கள். ஏனென்றால் அவர்கள் இதை இந்த அளவிற்கு ஆபத்து என உணர்ந்துகொள்ளாததுதான் காரணம்.

இந்த கொரோனாவிற்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத நிலையில் ,இந்த கொடிய வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அனைத்து விஞ்ஞனிகளும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இருந்தாலும் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் வருகிறது.பல்வேறு நாடுகள் இதை தடுக்கும் முயற்சியாக ஊரடங்கை அமல்படுத்தி உள்ளனர். இருந்தாலும் நோய் தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது.

தற்போது உலகம் முழுவதும் இதுவரை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோன வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1.20 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தில் முதல் இடத்தில் இருந்த இத்தாலியையும் மிஞ்சிய அமெரிக்காவில் இதுவரை 26 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் ஒரே நாளில் 2400 பேர் இந்த கொரோனா வைரசுக்கு பலியாகியுள்ளதால் பொதுமக்கள் அதிக அச்சத்தில் உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close